பிச்சா பாத்திரம்
அவர்கள் வந்தார்கள்
நாங்கள் அழையாமல்.
செந்நெல் மா
தெங்கின் வெண் துருவல்
சேர்ந்தவிந்த வாசத்தில்
நிறைந்திருந்தன எமது
பாத்திரங்கள்.
பறித்தெறிந்து,
'பிச்சா' பாத்திரத்தைக்
கை திணித்த பின்னர்
பிரகடனம் செய்தார்கள்
'நாங்களே உங்கள் மீட்பர்கள்'
(யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொறுபதிகாரி பிரசாத் பெர்ணாண்டோ, நவீனம் தெரியாமல் பிட்டு மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தவர்களுக்கு தாங்களே 'பிஸா' (Pizza) உணவை அறிமுகப் படுத்தியதாக நீதிமன்றில் சொல்லியிருந்தார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக