புதன், 19 மே, 2021

இருளேந்தி நினைவேந்தல்

 






இருண்மையின் புதல்வர்கள்
சுடருக்கஞ்சித் தெருவெங்கும்
துவக்கோடு திரிந்தனர்,
ஆயிரமாய்.
 
'கடல் மணலைப் போல
சிதறடிக்கப் பட்ட தலைமுறை'
வீழ்ந்த முற்றமெங்கும்
கங்குல் கிழித்துச்
சுடரெழுந்தது.
 
மனங்களில் விதைக்கப்பட்டது
நினைவுகளும், ஒளியும்,
அழிக்கப் பட்ட கனவுகளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக