கவிஞ;
கவி நுகர்ந்தேன்,
நெக்குருகிப் போனேன்,
விழியோர நீர் துடைத்தேன்.
என்றாலும் சற்றே நில்.
அறிவாய் நீ,
இரு விடயம்
மட்டும் தான்.
ஒன்று;
சாதியிரண்டொழிய வேறில்லை
வாங்குவோர் பெரியோர்,
விற்போர் மிகப் பெரியோர்,
இப்பொழுதின் பட்டாங்கில் உள்ளபடி.
உன் 'பண்டம்' என்ன விலை?
இரண்டு;
"சொல்ல வெட்கமே;
எனினும் சொல்லாமலும் போக
ஒண்ணாதிருக்கிறது.
ஓம் அந்தப் 'பட்டாங்கில்'
உன்னாணை நானுமொரு
'கை நாட்டுப்' போட்டதுண்மை*.
* நீலாவணனின் 'பாவம் வாத்தியார்' கவிதை வரிகள். பெட்டிசம் பட்டாங்காகவும், கையெழுத்து கை நாட்டாகவும் மாற்றப் பட்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக